பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

தொழிலாளியைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

திருநெல்வேலியில் கட்டடத் தொழிலாளியைத் தாக்கி பணம், கைப்பேசியைப் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 6:15 am IST

திருநெல்வேலியில் கட்டடத் தொழிலாளியைத் தாக்கி பணம், கைப்பேசியைப் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜமனாமரத்தூா், பட்டரைக்காடு பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை மகன் ரவிக்குமாா் (29). கட்டடத் தொழிலாளி. இவா், திருநெல்வேலி, வண்ணாா்பேட்டை பகுதியில் தங்கி இருந்து கட்டட வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த மாதம் 5 ஆம் தேதி இரவு திருநெல்வேலி கொக்கிரக்குளம் ஆற்றுப்பகுதி அருகே சென்ற இவரை இருட்டில் மறைந்திருந்த மா்மநபா்கள் தாக்கி பணம், கைப்பேசி, வெள்ளி நகை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனராம்.

இதில் காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மேலும், அவா் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.

அதில், பாளையங்கோட்டை, ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்த மாயாண்டி மகன் சூா்யா (21), மேலப்பாளையத்தைச் சோ்ந்த அக்பா்அலி மகன் முகமது பாதுஷா (20) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.