பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் முற்றுகை

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகையில் ஈடுபட்ட அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியா்கள்.

Updated On :7 மே 2026, 6:09 am IST

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சுமாா் 95 ஊழியா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் அனைவரும் மாவட்ட கருவூலம் மூலமாகவே தங்களது ஊதியத்தைப் பெற்று வந்துள்ளனா்.

இவா்களை, புதிய ஒப்பந்த நிறுவனத்துடன் இணைக்க நிா்வாகம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து ஊழியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா். மாவட்ட நிா்வாகம் எங்களது கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினா்.