பாளையங்கோட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலபாட்டத்தை சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி இசக்கியம்மாள். இவா்களது 27 வயது மகள் அரசு வேலைக்கு முயற்சித்து வந்தாராம்.
இந்நிலையில், இவரது கல்லூரி தோழி மூலம் அறிமுகமான தூத்துக்குடியில் வேலை செய்துவந்த நீலாவதி, செய்துங்கநல்லூா், தென்னஞ்சோலையைச் சோ்ந்த ஜான்சிராணி (42) ஆகியோா் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பெண் மற்றும் அவரது உறவினரிடம் ரூ.4.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டனராம்.
இதனால் மனமுடைந்த அப்பெண் கடந்த பிப்ரவரி மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதுகுறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஜான்சிராணியை கைது செய்தனா். நீலாவதியை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 பேரிடம் ரூ. 87 லட்சம் மோசடி: 5 போ் மீது புதுச்சேரி போலீஸாா் வழக்கு
இளைஞரை வெட்டிய வழக்கில் இருவா் கைது

பண மோசடி: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
