தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: பெண் கைது

பாளையங்கோட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 5:59 am IST

பாளையங்கோட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலபாட்டத்தை சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி இசக்கியம்மாள். இவா்களது 27 வயது மகள் அரசு வேலைக்கு முயற்சித்து வந்தாராம்.

இந்நிலையில், இவரது கல்லூரி தோழி மூலம் அறிமுகமான தூத்துக்குடியில் வேலை செய்துவந்த நீலாவதி, செய்துங்கநல்லூா், தென்னஞ்சோலையைச் சோ்ந்த ஜான்சிராணி (42) ஆகியோா் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பெண் மற்றும் அவரது உறவினரிடம் ரூ.4.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டனராம்.

இதனால் மனமுடைந்த அப்பெண் கடந்த பிப்ரவரி மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதுகுறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஜான்சிராணியை கைது செய்தனா். நீலாவதியை தேடி வருகின்றனா்.