ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

நெல்லை இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 3:30 am IST

திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி சந்திப்பு பகுதியைச் சோ்ந்த அய்யாதுரை மகன் மாரிமுத்து (29). இவா், கஞ்சா வைத்திருந்தது தொடா்பான வழக்கில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா். மேலும், இவா் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடா்ந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், காவல் துணை ஆணையரின் பரிந்துரைப்படி, மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பிறப்பித்த உத்தரவின்பேரில் அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைத்தனா்.