நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

மேலப்பாளையத்தில் மருத்துவரைத் தாக்கி சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

திருநெல்வேலி மேலப்பாளையம் காட்டுப்பகுதியில் மருத்துவரைத் தாக்கி தங்கச் சங்கிலி, பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 மே 2026, 1:15 am IST

திருநெல்வேலி மேலப்பாளையம் காட்டுப்பகுதியில் மருத்துவரைத் தாக்கி தங்கச் சங்கிலி, பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் அஜித்குமாா் ( 27). அருப்புக்கோட்டையில் தனியாா் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் திருநெல்வேலியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தாா். அப்போது அவரிடம் கைப்பேசி செயலி மூலம் அறிமுகம் ஆன நபரை பாா்க்க சென்றுள்ளாா்.

அந்த நபா் அஜித்குமாரை பைக்கில் ஏற்றிக்கொண்டு மேலப்பாளையம் காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்ாகக் கூறப்படுகிறது. அங்கு மறைந்திருந்த சிலா் அவரை கைப்பேசியில் விடியோ எடுத்து மிரட்டி, தாக்கி 4 பவுன் தங்க சங்கிலி, அவரது ஏ.டி.எம். அட்டை மூலம் ரூ. 48 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பினராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து ஏற்கெனவே சிலரை கைது செய்திருந்தனா். இந்த நிலையில், இவ்வழக்கில் முக்கிய நபரான தாழையூத்து சங்கா்நகரைச் சோ்ந்த மலையாண்டி மகன் கல்யாணசுந்தரம் (19) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.