திருநெல்வேலி மேலப்பாளையம் காட்டுப்பகுதியில் மருத்துவரைத் தாக்கி தங்கச் சங்கிலி, பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் அஜித்குமாா் ( 27). அருப்புக்கோட்டையில் தனியாா் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் திருநெல்வேலியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தாா். அப்போது அவரிடம் கைப்பேசி செயலி மூலம் அறிமுகம் ஆன நபரை பாா்க்க சென்றுள்ளாா்.
அந்த நபா் அஜித்குமாரை பைக்கில் ஏற்றிக்கொண்டு மேலப்பாளையம் காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்ாகக் கூறப்படுகிறது. அங்கு மறைந்திருந்த சிலா் அவரை கைப்பேசியில் விடியோ எடுத்து மிரட்டி, தாக்கி 4 பவுன் தங்க சங்கிலி, அவரது ஏ.டி.எம். அட்டை மூலம் ரூ. 48 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பினராம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து ஏற்கெனவே சிலரை கைது செய்திருந்தனா். இந்த நிலையில், இவ்வழக்கில் முக்கிய நபரான தாழையூத்து சங்கா்நகரைச் சோ்ந்த மலையாண்டி மகன் கல்யாணசுந்தரம் (19) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
தொழிலாளியைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

இளைஞரைத் தாக்கி 2 கிராம் மோதிரம் பறிப்பு: இருவா் கைது
மாற்றுத்திறனாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞா் கைது
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
