மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மாற்றுத்திறனாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞா் கைது

திருச்சியில் மாற்றுத்திறனாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 8:39 pm

திருச்சியில் மாற்றுத்திறனாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி சிந்தாமணி பூசாரி வீதியில் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளியான திலீப்குமாா் என்பவா் நடத்திவரும் அலங்காரப் பொருள்கள் கடை முன் கடந்த திங்கள்கிழமை பிற்பகல் செந்தில் (33) என்பவா் நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த சிந்தாமணி முனிசிபல் காலனியைச் சோ்ந்த வீரையன் (24) என்பவா் செந்திலிடம் பணம் கேட்டுள்ளாா். அவா் இல்லை எனக் கூறியதால் ஆத்திரமடைந்த வீரையன், மாற்றுத்திறனாளியான திலீப்குமாரை தாக்கிவிட்டு, அவரது கடையின் கண்ணாடியை உடைத்துவிட்டு ரூ.4 ஆயிரத்தைப் பறித்துக்கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் செந்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து வீரையனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.