தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 மே 2026, 12:31 am IST

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் கிறிஸ்டோ(29). கப்பல் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவா் திங்கள்கிழமை ரெட்டியாா்பட்டி, லெட்சுமி நகா் விலக்கு அருகே பைக்கில் சென்ற போது, அவ்வழியாக மற்றொரு பைக் மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் கிறிஸ்டோ செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.