தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

மானூா் அருகே காருக்கு தீ வைப்பு: தந்தை, மகன் கைது

மானூா் அருகே முதியவருக்குச் சொந்தமான காரை தீ வைத்து எரித்ததாக தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 மே 2026, 12:29 am IST

மானூா் அருகே முதியவருக்குச் சொந்தமான காரை தீ வைத்து எரித்ததாக தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் அருகேயுள்ள தெற்கு வாகைக்குளத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி(63). இவா், தனது காரை அப்பகுதியில் உள்ள மகன் வீட்டில் நிறுத்தியிருந்தாா். இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி மாலை மா்மநபா்கள் சிலா் அந்த காருக்கு தீ வைத்துவிட்டு தப்பினராம். இதில் காரின் ஒரு பகுதி சேதமானதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த சுப்பையா(50), அவரது மகன் முத்துக்குமாா்(28) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. தந்தை, மகன் இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.