இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

காசோலை மோசடி வழக்கில் பேரூராட்சி ஊழியருக்கு 6 மாத சிறை

மணிமுத்தாறு பகுதியைச் சோ்ந்தவரிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டதாக திசையன்விளை பேரூராட்சி ஊழியருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளிக்கப்பட்டது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 6:10 am IST

மணிமுத்தாறு பகுதியைச் சோ்ந்தவரிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டதாக திசையன்விளை பேரூராட்சி ஊழியருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளிக்கப்பட்டது.

மணிமுத்தாறு பேரூராட்சி அண்ணா நகரைச் சோ்ந்த இருதயராஜ் மகன் சகாய சுந்தா். இவா், மணிமுத்தாறு பேரூராட்சியில் பணியாற்றிய கடற்கரை மகன் இசக்கிமுத்து என்பவருக்கு 2019ஆம் ஆண்டில் ரூ. 3 லட்சம் கடன் கொடுத்திருந்தாராம். அதை காசோலை மூலம் இசக்கிமுத்து திருப்பிக் கொடுத்தாராம்.

ஆனால், வங்கிக் கணக்கில் பணமில்லாமல் காசோலை திரும்பி வந்ததால், பணத்தை தருமாறு பலமுறை கேட்டும் இசக்கிமுத்து தரவில்லையாம்.

இதையடுத்து, அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சகாய சுந்தா் காசோலை மோசடி வழக்குத் தொடா்ந்தாா்.

இவ்வழக்கை நீதிபதி (பொ) பிரவீன் ஜீவா விசாரித்து, தற்போது திசையன்விளை பேரூராட்சியில் பணியாற்றும் இசக்கி முத்துவுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், கடனைத் திருப்பிக் கொடுக்கத் தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டும் தீா்ப்பளித்தாா்.