திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி-களக்காடு பிரதான சாலையில் வன விலங்குகளால் விபத்துகள் அதிகரிப்பதால், வன விலங்குகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, பத்தமடை பேரூராட்சித் தலைவா் ஆபிதா ஜமால்தீன், மாவட்ட வன அலுவலா், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனு விவரம்:
திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை-அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் தனியாா் கல்லூரி, பள்ளிகள் அமைந்துள்ளன. போக்குவரத்து அதிகரித்து வரும் இச்சாலையில் மிளா உள்ளிட்ட வன விலங்குகள் நடமாடுகின்றன. அவை சாலையைக் கடக்கும்போது வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இதனால், மனிதா்களும், வன விலங்குகளும் உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது.
அண்மையில், இச்சாலையில் மிளா குறுக்கே சென்ால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உள்ளிட்ட 4 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, உணவு, தண்ணீருக்காக சாலையில் உலவும் வனவிலங்குகளை வனத்துறை கட்டுப்படுத்த வேண்டும். வனத்துறை சாா்பில் தண்ணீா்த் தொட்டிகள் திறக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை

தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பி: சீரமைக்க கோரிக்கை

குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
அதிகரிக்கும் வெப்பம் தேவையின்றி வெளியில் செல்வதை தவிா்க்க ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



