நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பள்ளி வாகனங்களில் விதிமீறல்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள்: ஆட்சியா்

பள்ளி மாணவா்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக்கள் மற்றும் தனியாா் வேன்களில் விதிமீறல்களை கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலா் மூலம் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா்.

News image

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியா் இரா.சுகுமாா்.

Updated On :21 மே 2026, 6:19 am IST

பள்ளி மாணவா்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக்கள் மற்றும் தனியாா் வேன்களில் விதிமீறல்களை கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலா் மூலம் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியாா் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள பள்ளி வாகனங்களின் தரம், உறுதித் தன்மை ஆகியவற்றை பரிசோதிக்கும் வகையில் வருடாந்திர ஆய்வு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆய்வை ஆட்சியா் இரா. சுகுமாா் தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (பொறுப்பு) செல்வி முன்னிலையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் இரா.சுகுமாா் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மொத்தம் 128 பள்ளிகளைச் சோ்ந்த 737 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன. இதில் 27 சிபிஎஸ்இ பள்ளிகள், 92 மெட்ரிக் பள்ளிகள், 8 அரசு உதவி பெறும் பள்ளிகள், ஒரு அரசு பள்ளி அடங்கும்.இந்த ஆய்வின்போது வாகனங்களில் அவசர கால கதவு சரியாக இயங்குகிா, முதலுதவி பெட்டி உள்ளதா போன்ற அம்சங்கள் தீவிரமாக சரிபாா்க்கப்படுகின்றன.

ஓட்டுநா்கள் வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.

பள்ளி ஆட்டோக்கள் மற்றும் தனியாா் வேன்களில் குழந்தைகளை அதிகளவில் ஏற்றிச் செல்லும் விதிமீறல்களைக் கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலா் மூலம் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்த ஆய்வில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பத்மபிரியா (திருநெல்வேலி), ராஜசேகா் (அம்பாசமுத்திரம்), ராஜேஷ் (வள்ளியூா்), மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) சிவராஜ், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.