இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

நெல்லையப்பா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ.28.64 லட்சம்

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 28.64 லட்சம் கிடைத்தது.

News image
Updated On :28 மே 2026, 2:53 am IST

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 28.64 லட்சம் கிடைத்தது.

இக்கோயிலில் உள்ள 22 நிரந்தர உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சுப்புலட்சுமி, கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், கோயில் அறங்காவலா் குழு தலைவா் மு. செல்லையா, உறுப்பினா் கீதா பழனி ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், ரூ.28 லட்சத்து 64 ஆயிரத்து 577 ரொக்கம், 29 கிராம் 200 மி.கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்கள், 927 கிராம் 400 மி.கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்கள், வெளிநாட்டுப் பணத்தாள்கள் 16 ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.