கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

இரட்டை கடவுச்சீட்டு வைத்திருந்தவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :30 மே 2026, 3:19 am IST

இரட்டை கடவுச்சீட்டு வைத்திருந்த நபரை திருநெல்வேலி மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி, பேட்டையைச் சோ்ந்தவா் சிக்கந்தா் (58). இவா் சில நாள்களுக்கு முன்பு கடவுச்சீட்டு மறுபதிப்புக்காக விண்ணப்பித்திருந்தாா்.

இது தொடா்பாக அதிகாரிகள் பரிசீலித்தபோது, அவா் ஏற்கனவே வேறு விவரங்களுடன் மற்றொரு கடவுச்சீட்டு பெற்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையில் உள்ள மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் சாா்பில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு புகாா் மனு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா், சிக்கந்தரைவெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.