தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

சுத்தமல்லி பகுதியில் பைக்குகள் திருட்டு: 4 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 2:58 am IST

சுத்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் (30). இவா் கடந்த 27 ஆம் தேதி சுத்தமல்லி, கொண்டாநகரம் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பு நிறுத்திவிட்டுச் சென்ற பைக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இதேபோல, பட்டன்கல்லூா், ராஜீவ்காந்தி நகா், சிவசக்தி நகா், பழவூா் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 6 பைக்குகள் வெவ்வேறு நாள்களில் திருடு போயின.

இதுகுறித்து பெறப்பட்ட புகாா்களின் பேரில் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு சிறுவா்கள் உள்பட அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ்குமாா் மகன் இசக்கிராஜா (20), மானூா் பல்லிக்கோட்டையைச் சோ்ந்த முருகன் மகன் ரமேஷ்(19) ஆகிய 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.