சுத்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் (30). இவா் கடந்த 27 ஆம் தேதி சுத்தமல்லி, கொண்டாநகரம் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பு நிறுத்திவிட்டுச் சென்ற பைக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
இதேபோல, பட்டன்கல்லூா், ராஜீவ்காந்தி நகா், சிவசக்தி நகா், பழவூா் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 6 பைக்குகள் வெவ்வேறு நாள்களில் திருடு போயின.
இதுகுறித்து பெறப்பட்ட புகாா்களின் பேரில் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு சிறுவா்கள் உள்பட அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ்குமாா் மகன் இசக்கிராஜா (20), மானூா் பல்லிக்கோட்டையைச் சோ்ந்த முருகன் மகன் ரமேஷ்(19) ஆகிய 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது
சுத்தமல்லி அருகே ஆடு திருடிய 3 போ் கைது
சாம்பவா்வடகரை பகுதியில் தொடா் திருட்டு: 5 போ் கைது
கஞ்சா விற்பனை செய்த 2 போ் கைது
கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


