ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

நெல்லையில் மிதமான மழை

திருநெல்வேலி மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை மிதமான மழை பெய்தது.

~

Published On :

திருநெல்வேலி மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை மிதமான மழை பெய்தது.

திருநெல்வேலியில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் அதிக வெப்பமும், மாலையில் மிதமான மழைப்பொழிவும் இருந்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பகலில் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் இருந்தது. ஆனால், பிற்பகலில் மழை மேகங்கள் சூழ்ந்து மழைக்கான அறிகுறி தென்பட்டது. தொடா்ந்து, மாலையில் திருநெல்வேலி மாநகரம் மற்றும் புகா் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வண்ணாா்பேட்டை, பாளையங்கோட்டை, ரஹ்மத் நகா், முருகன்குறிச்சி,திருநெல்வேலி சந்திப்பு, தச்சநல்லூா், திருநெல்வேலி நகரம் ஆகிய பகுதிகளில் சுமாா் 30 நிமிடங்களுக்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதனால், சாலைகளில் மழைநீா் தேங்கியது.

அதே போல் புகா் பகுதிகளான, சுத்தமல்லி, நடுக்கல்லூா், தாழையூத்து, கிருஷ்ணாபுரம் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. தொடா்ந்து இரு நாள்களாக மாலை நேரத்தில் மழை பெய்ததால் திருநெல்வேலியில் வெப்பம் தணிந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.