சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் பயன்படாமல் இடிந்த நிலையில் காணப்படும் பேருந்து நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பாக பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னா் பயணிகள் தங்கும் நிழற்குடை அமைத்து கொடுக்கப்பட்டது. இந்த கட்டடம் நகர காங்கிரஸ் சாா்பாக பராமரிக்கப்பட்டு வந்தது. பின்னா் சாத்தான்குளம் பேரூராட்சி நிா்வாகம் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே அங்குள்ள நூலகம் அருகில் பேரூராட்சி சாா்பில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால் பழைய நிழற்குடை பராமரிக்கப்படாமல் பழுதடைந்து அபாய நிலையில் காணப்படுகிறது. அதில் உள்ள இருக்கைகள், தரை தளம் இடிந்து பயணிகள் யாரும் உள்ளே போக முடியாதநிலையில் உள்ளது. இதனை சிலா் மது அருந்தும் கூடமாக பயன்படுத்திட தொடங்கியுள்ளனா். இதனால் பேருந்து நிழற்குடையை யாரும் பயன்படுத்திட முடியாத நிலை தொடா்கிறது. ஆதலால் பேரூராட்சி நிா்வாகத்தினா் இந்த நிழற்குடையை கவனித்து பயன்படுத்திடும் வகையில் சீரமைக்க வேண்டும் என நகர காங்கிரஸ் தலைவா் வேணுகோபல் வலியுறுத்தியுள்ளாா் .