சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம் ரஜினி படத்திற்குப் பின் சிலம்பரசனை இயக்கும் அஷ்வத் மாரிமுத்து!திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிக்கு செருப்பு மாலை அணிவித்த கிராம மக்கள்!சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின்
/

திருச்செந்தூர் ஸ்ரீ புளியடி சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா

திருச்செந்தூர் ஸ்ரீ புளியடி சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:38 am IST

திருச்செந்தூர் ஸ்ரீ புளியடி சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.
திருச்செந்தூர் 6ஆவது வார்டு பகுதி புளியடித் தெருவில் உள்ள ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதை முன்னிட்டு காலையில் ஸ்ரீசந்தன விநாயகர், ஸ்ரீ சந்தனமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,  தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். இரவில் சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் புஷ்ப அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.