தூத்துக்குடி மாநகராட்சியில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை முறைப்படுத்துவது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) முதல் இரண்டு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளை முறைப்படுத்துதல் தொடர்பாக, தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், மனை உரிமையாளர்கள் மனைப் பிரிவு வரைபடம், சுற்று சார்பு வரைபடம், பத்திர நகல், பட்டா, சிட்டா நகல், வில்லங்கச் சான்று ஆகியவற்றுடன் பங்கேற்று ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து, உரிய கட்டணங்களையும் செலுத்தி விண்ணப்பித்து மனையை வரன்முறைப்படுத்தி அதே இடத்தில் உத்தரவு பெற்றுக் கொள்ளலாம். மேலும், மேற்கு மண்டல அலுவலகத்தில் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1ஆம் தேதிகளிலும் முகாம் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







