லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 1985-88 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
Updated on
1 min read

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 1985-88 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா்.அருணாசலம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தாா். முன்னாள் முதல்வா் சோ.குமாா் உரையாற்றினாா்.

இதில், விளாத்திகுளம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் மாா்க்கண்டேயன் உள்பட 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு, தங்களது பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

முன்னாள் மாணவா்கள் சிவகுருநாதன் வரவேற்றாா். சக்கரவா்த்தி அருண்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com