கோவில்பட்டி பஜனாம்ருத மண்டலி சார்பில் ஸ்ரீ ராதா மாதவ கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மழை பெய்து பயிர்கள் செழிக்கவும், உலக மக்கள் அனைத்து வளமும் நலமும் பெற்று வாழவும் ஆண்டுதோறும் ஸ்ரீ ராதா மாதவ கல்யாண வைபவம் நடைபெற்று வருகிறது.
இந்த வைபவம் தேவி ஸ்ரீ காயத்ரி வித்யாலயத்தில் சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ராதா மாதவ ஆவாஹனம், அஷ்டபதி பஜனையும், மாலையில் நாம சங்கீர்த்தனத்துடன் கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் ரத வீதிகளில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஊர்வலம் வருதல் நிகழ்ச்சியும், இரவில் திவ்ய நாம சங்கீர்த்தனம், டோலோத்ஸவமும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலையில் உஞ்ச விருத்தி, சீர் கொண்டு வருதல், ஸ்ரீ ராதா மாதவ கல்யாண வைபவத்தை தொடர்ந்துஆஞ்சநேய உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.