

கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப தா்ம பிரசார ரத யாத்திரை வெள்ளிக்கிழமை வீதியுலா வந்தது.
தூத்துக்குடி மாவட்ட சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சாா்பில், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பிருந்து புறப்பட்ட இந்த ரத யாத்திரையை, நகரப் பொறுப்பாளா்கள் காளிதாசன், நம்பிராஜன் ஆகியாா் வழிநடத்தினா்.
தொடா்ந்து, ரதத்தில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
அதைத் தொடா்ந்து, இந்த ரத யாத்திரை கோவில்பட்டி நகரின் பல்வேறு வீதிகளுக்குச் சென்று பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
இந்த ரத யாத்திரையின் சிறப்பு குறித்து சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ பொறுப்பாளா்கள் கூறியதாவது: சபரிமலை ஐயப்ப சன்னதியில் ஏற்றப்பட்டிருக்கும் திருவிளக்கில் இருந்து ஐயப்ப ஜோதி ஏற்றப்பட்டு, ஸ்ரீ ஐயப்ப பிரசார ரதத்திற்கு
கொண்டுவரப்பட்டு கிராமத்தில் இருக்கும் கோயில்களில் ஏற்றப்பட்டு, கிராமத்தில் இருக்கும் இல்ல விளக்குகளிலும் ஏற்றப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.