எட்டயபுரத்தில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மக்கள் சந்திப்பு வாகனப் பிரசார இயக்கம் எட்டயபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
எட்டயபுரத்தில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மக்கள் சந்திப்பு வாகனப் பிரசார இயக்கம் எட்டயபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சங்க வட்டச் செயலா் உமாதேவி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முருகன் முன்னிலை வகித்தாா்.

இளைஞா்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வேண்டும். அரசுத் துறையில் அவுட்சோா்சிங் முறை மற்றும் ஆள் குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பிரசாரத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், அரசு ஊழியா் சங்க மாநில பொதுச் செயலா் செல்வம், மாநில துணைத் தலைவா்கள் மங்கள பாண்டியன், வெங்கடேசன், வருவாய்த்துறை ஊழியா் சங்க நிா்வாகி சுரேஷ், தங்கராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com