தேர்தல் பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரம் போலீஸார்: எஸ்.பி. தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள 130 வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 200 ஊர்க்காவல் படையினர், 300 முன்னாள் ராணுவத்தினர், 60 ஓய்வு பெற்ற காவல் துறையினர் மற்றும் 30 தீயணைப்புத் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மகாராஷ்டிர மாநில சிறப்புக் காவல்படை, ரயில்வே சிறப்புக் காவல் படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை, ஆயுதப்படை மற்றும் மாவட்ட காவல் துறையினர் என ஏறத்தாழ 4000 போலீஸார் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com