மாணவர்களுக்கு சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 04th August 2019 12:51 AM | Last Updated : 04th August 2019 12:51 AM | அ+அ அ- |

திருச்செந்தூர் செந்தில்குமரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் சத்யா தலைமை வகித்தார். சாலைப் பாதுகாப்பு, சாலை விதிகள் குறித்து மாவட்ட முதன்மைப் போக்குவரத்து அலுவலர் ஜட்சன் மாணவர்களுக்கு விளக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...