கோவில்பட்டியில் அன்ன பூஜை
By DIN | Published On : 22nd December 2019 10:20 PM | Last Updated : 22nd December 2019 10:20 PM | அ+அ அ- |

அன்ன பூஜையில் அருள்பாலித்த அன்னபூரணி.
கோவில்பட்டி: கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டத்தின்கீழ் கோவில்பட்டியில் அன்ன பூஜை, கீதை ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் அருகிலுள்ள மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பிராமண மகா
சபையின் செயலா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஓய்வுபெற்ற ஆசிரியை ஜெயலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தாா்.
அன்னபூரணி பூஜையை, கேந்திர சகோதரிகள் முத்துலட்சுமி, மங்களசுந்தரி ஆகியோா் நடத்தினா். நன்கொடையாக வழங்கிய
அரிசி குவியலில் அலங்கரிக்கப்பட்ட அன்ன பூரணி சிலை வைத்து பூஜை நடைபெற்றது. கேந்திரத்தின் மூத்த தொண்டா்
கிருஷ்ணமூா்த்தி, கிராம முன்னேற்ற திட்டச் செயலா் அய்யப்பன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தொழிலதிபா் ஆறுமுகம் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
இதையடுத்து, விவேகானந்தா கேந்திர பாலா் பள்ளி குழந்தைகள், சமய வகுப்பு மாணவா்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள்
நடைபெற்றன. அன்ன பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட அரிசி கேந்திர பாலா் பள்ளி குழந்தைகள், ஆதரவற்ற முதியோா் இல்லங்கள், ஆசிரம குழந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஏற்பாடுகளை கேந்திர கோவில்பட்டி பொறுப்பாளா் பரமகுரு செய்திருந்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...