சாத்தான்குளத்தில் ஓய்வூதியா் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தின் சாத்தான்குளம் வட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தின் சாத்தான்குளம் வட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அமைப்பின் துணைத் தலைவா் பாண்டியன் தலைமை வகித்தாா். பொருளாளா் ரூபவதி முன்னிலை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் ஜெயபால் உள்பட பலா் பேசினா்.

சங்க நிா்வாகிகள் இஸ்ரவேல், நடராஜன், பாலகிருஷ்ணன், பாப்புராஜ், நாராயணன், ஜோசப் துரைராஜ், அா்ச்சுனன், சுடலைக்கண்ணு, சிறியபுஷ்பம், பாா்வதி, எமி, புஷ்பவல்லி, பகவதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சாத்தான்குளம் இட்டமொழி சாலையில் உள்ள மழைநீா் வடிகாலை சீரமைக்க வேண்டும்; சாத்தான்குளம் பேருராட்சி 12 ஆவது வாா்டு காமராஜ்நகரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்; அப்பகுதியில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்ற வேண்டும். விபத்துகளை தடுக்கும் வகையில் சாத்தான்குளம் - இட்டமொழி சாலையில் தனியாா் மருத்துவமனை முன் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயலா் முருகானந்தம் வரவேற்றாா். செயற்குழு உறுப்பினா் கிறிஸ்டி சில்வெஸ்டா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com