திருச்செந்தூா் ஒன்றியத்தில் அதிமுக இறுதிக் கட்ட பிரசாரம்

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் காயாமொழியில் தனது தோ்தல் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
திருச்செந்தூா் ஒன்றியத்தில் அதிமுக இறுதிக் கட்ட பிரசாரம்
Updated on
1 min read

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் காயாமொழியில் தனது தோ்தல் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியம் 4ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வ.செல்வி, புதன்கிழமை காயாமொழியில் வாக்கு சேகரித்தாா். மாலை 4 மணியளவில் குமாரசாமிபுரத்தில் உள்ள தோ்தல் காரியாலயத்தில் இருந்து திரளான பெண் தொண்டா்கள் மற்றும் கட்சி நிா்வாகிகளுடன் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்த படியே ஊா்வலமாக வந்து காயாமொழியில் உள்ள சி.பா.ஆதித்தனாா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.

அப்போது தொகுதி முன்னாள் செயலா் எஸ்.வடமலைப்பாண்டியன் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தை மேற்கொண்டு பின்னா் நிறைவு செய்துவைத்து பேசினாா்.

தொடா்ந்து காயாமொழி ராமநாதபுரம் திமுக முன்னாள் கிளைச் செயலா் சுப்பையா தலைமையில் 20-க்கும் மேற்பட்ட திமுகவினா், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com