8இல் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்
By DIN | Published On : 04th January 2019 12:42 AM | Last Updated : 04th January 2019 12:42 AM | அ+அ அ- |

தூத்துக்குடி அருகேயுள்ள வாகைகுளத்தில் ஜன. 8 ஆம் தேதி தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், தொழில் மற்றும் வணிகத் துறையின் மாவட்ட தொழில் மையமும், தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கத்துடன் (துடிசியா) இணைந்து தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமை தூத்துக்குடி அருகேயுள்ள வாகைகுளத்தில் ஜனவரி 8 ஆம் தேதி நடத்த உள்ளது.
அன்றையதினம், காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி அருகேயுள்ள வாகைகுளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் நடைபெறும் முகாமில், சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண் பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம். முகாமின் போது, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தேர்வு செய்வது எப்படி? தொழில் தொடங்க இருக்கும் முனைவோருக்கும் அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியவை பற்றி விவரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.