தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறிப்பு

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு நடந்துச் சென்ற பெண்ணிடம் இருந்து  நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு நடந்துச் சென்ற பெண்ணிடம் இருந்து  நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் 5 ஆவது தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் மனைவி கவிதா (39). இவர், வீட்டின் அருகேயுள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். பிரையன்ட்நகர் 2 ஆவது தெரு பகுதியில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வந்த இளைஞர் கவிதா, அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாராம். கவிதா சப்தம் இட்ட போதிலும் மோட்டார் சைக்கிளில் சென்றவரை பிடிக்க முடிய வில்லையாம். இதுகுறித்து, தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: தூத்துக்குடி வி.எம்.எஸ். நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், தனது மனைவி சகாய மொபீனா மற்றும் குழந்தைகளுடன் சனிக்கிழமை இரவு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது, சகாய மொபீனா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, 2 செல்லிடப்பேசி ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்று விட்டனராம். இதுகுறித்து, சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com