ஆத்தூரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 09th June 2019 12:55 AM | Last Updated : 09th June 2019 12:55 AM | அ+அ அ- |

ஆத்தூரில் குடும்பப் பிரச்னை காரணமாக தொழிலாளி வீட்டில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
வடக்கு ஆத்தூர் பரதர் தெருவைச் சேர்ந்த ஜெரால்டு மகன் சுரேஷ் (44). நாசரேத் அருகே பேக்கரியில் வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டாம். இதனால், இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.