கஞ்சா கடத்தியதாக இளைஞர் கைது

காயல்பட்டினத்தில்  கஞ்சா கடத்தியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
Updated on
1 min read

காயல்பட்டினத்தில்  கஞ்சா கடத்தியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஆறுமுகனேரி காவல் ஆய்வாளர் பத்திரகாளி தலைமையில் போலீஸார் ஆறுமுகனேரி- காயல்பட்டினம் புறவழிச்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த இளைஞர் வந்த மோட்டார் சைக்கிளில் 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்ததாம். விசாரணையில், அவர் காயல்பட்டினம் சீதக்காதிநகர் முகமதுஅலி ஜின்னா மகன் முகம்மது யூசுப்  (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com