காயல்பட்டினம் நகராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 28th March 2019 06:50 AM | Last Updated : 28th March 2019 06:50 AM | அ+அ அ- |

காயல்பட்டினம் நகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நகராட்சி மேலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தங்கமுனியம்மாள் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் காய்கனி, பூக்கள், தானியங்கள் மூலமாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நகராட்சி அலுவலகத்திலிருந்து விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. ஏற்பாடுகளை நகராட்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் செய்திருந்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...