பாட்டக்கரை பத்திரகாளியம்மன் கோயிலிலில் 4,508 திருவிளக்கு பூஜை
By DIN | Published On : 28th March 2019 06:40 AM | Last Updated : 28th March 2019 06:40 AM | அ+அ அ- |

குரும்பூர் அருகே உள்ள பாட்டக்கரை பத்திரகாளி அம்மன் கோயிலிலில் 4,508 திருவிளக்குப் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 2ஆவது செவ்வாய்க்கிழமை தோறும் திருவிளக்குப் பூஜை நடைபெற்று வருகிறது. இப்பூஜையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பூஜையை சந்திரம்மா தொடங்கிவைத்தார். இதில் மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், குரும்பூர், ஆழ்வார்திருநகரி, ஏரல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கோயில் தர்மகர்த்தா ஜெயராகவன், விஜயராகவன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...