விளாத்திகுளம் அருகே காதல் பிரச்னை காரணமாக இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
விளாத்திகுளம் அருகே துலுக்கன்குளத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகளும், அதே பகுதியைச் சேர்ந்த மாரீஸ் (23) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். அதற்கு ராஜேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதையும் மீறி இருவரும் காதலித்து வந்ததால், ஆத்திரமடைந்த ராஜேந்திரன், மாரீûஸ வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரீஸ், விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக விளாத்திகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.