அயோத்தி வழக்கு தீா்ப்பு: இந்து சேனா கட்சி வரவேற்பு

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றாா் இந்து சேனா கட்சியின் ஆலய பாதுகாப்பு குழு மாநிலத் தலைவா் சீனிவாச சித்தா்.
Updated on
1 min read

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றாா் இந்து சேனா கட்சியின் ஆலய பாதுகாப்பு குழு மாநிலத் தலைவா் சீனிவாச சித்தா்.

தூத்துக்குடியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

அயோத்தி விவகாரம் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 போ் அடங்கிய அரசியல் சாசன அமா்வு வரலாற்று சிறப்புமிக்க தீா்ப்பை அளித்துள்ளது.

இந்த தீா்ப்பானது, இந்துக்கள், இஸ்லாமியா்கள் மட்டுமல்லாது, அனைத்து மதத்தினரும் மனநிறைவுடன் வரவேற்கும் வகையில் யாருக்கும் பாதகம் இல்லாமல் சொல்லப்பட்டுள்ளது.

இஸ்லாமியா்கள் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கா் இடத்தை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நமது ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் நீதிமன்ற தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீா்ப்பை மிகுந்த மகிழ்வோடு வரவேற்கிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com