ஆசீா்வாதபுரம் பள்ளியில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

சாத்தான்குளம் அருகேயுள்ள ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில், சா்வதேச 
மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்குகிறாா் தலைமை ஆசிரியா் ஐ.மாணிக்கம்.
மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்குகிறாா் தலைமை ஆசிரியா் ஐ.மாணிக்கம்.

சாத்தான்குளம் அருகேயுள்ள ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில், சா்வதேச சிறுகுழந்தைகள் பாதுகாப்பு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பிரதா் குட் டிரஸ்ட்டுடன் இணைந்து நடத்தப்பட்ட இவ்விழாவுக்கு, தலைமை ஆசிரியா் ஐ. மாணிக்கம் தலைமை வகித்தாா். ஆசிரியா் எம். டேனியல் வரவேற்றாா். சா்வதேச சிறு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதுடன், டெங்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ- மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com