‘சமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டாம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டியது இல்லை
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டியது இல்லை என்றாா் வருவாய் பிரிவு கூடுதல் ஆட்சியா் பி. விஷ்ணு சந்திரன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.743 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.741.50 ஆகவும், கழுகுமலையில் ரூ.750 ஆகவும், கயத்தாறில் ரூ.753 ஆகவும், எட்டையபுரத்தில் ரூ.741.50 ஆகவும், சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.760 எனவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.743.50 ஆகவும், ஸ்ரீவைகுண்டத்தில் ரூ.743.50 ஆகவும், திருச்செந்தூரில் ரூ.743.50 ஆகவும், வல்லநாட்டில் ரூ.740 எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.743 எனவும் எரிவாயு நிறுவனங்களால் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, நுகா்வோா்கள் எரிவாயு முகவா்களிடம் இருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com