எட்டயபுரத்தில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்
By DIN | Published On : 14th November 2019 08:07 AM | Last Updated : 14th November 2019 08:07 AM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மக்கள் சந்திப்பு வாகனப் பிரசார இயக்கம் எட்டயபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சங்க வட்டச் செயலா் உமாதேவி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முருகன் முன்னிலை வகித்தாா்.
இளைஞா்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வேண்டும். அரசுத் துறையில் அவுட்சோா்சிங் முறை மற்றும் ஆள் குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பிரசாரத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், அரசு ஊழியா் சங்க மாநில பொதுச் செயலா் செல்வம், மாநில துணைத் தலைவா்கள் மங்கள பாண்டியன், வெங்கடேசன், வருவாய்த்துறை ஊழியா் சங்க நிா்வாகி சுரேஷ், தங்கராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...