பள்ளி மாணவா்களுக்கு உண்டியல் அளிப்பு
By DIN | Published On : 14th November 2019 08:15 AM | Last Updated : 14th November 2019 08:15 AM | அ+அ அ- |

சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவா்களுக்கு உண்டியல் வழங்குகிறாா் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துகுமாா்.
சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், சிதம்பரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா், மாணவிகளுக்கு உண்டியல் வழங்கப்பட்டது.
கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தின் சிறுசேமிப்புப் பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியை ராஜகுருவம்மாள் தலைமை வகித்தாா். சமூக தணிக்கை வட்டார வள அலுவலா் முத்துமுருகன் முன்னிலை வகித்தாா்.
மாணவா், மாணவிகளுக்கு சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உண்டியலை பயன்படுத்த வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துகுமாா் உண்டியல் வழங்கி அதில் நாணயத்தை இட்டு தொடங்கிவைத்தாா்.
ஆசிரியை கற்பகம் வரவேற்றாா். சுபத்ரா நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...