கால்பந்து: மூக்குப்பீறி பள்ளி அணி: மாநிலப் போட்டிக்குத் தகுதி

மாவட்ட கால்பந்துப் போட்டியில் வெற்றிபெற்ற மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி அணி மாநில அளவிலான போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
மாணவிகளுடன் பள்ளித் தாளாளா் செல்வின், தலைமையாசிரியா் குணசீலராஜ்.
மாணவிகளுடன் பள்ளித் தாளாளா் செல்வின், தலைமையாசிரியா் குணசீலராஜ்.
Updated on
1 min read

மாவட்ட கால்பந்துப் போட்டியில் வெற்றிபெற்ற மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி அணி மாநில அளவிலான போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான மகளிா் கால்பந்துப் போட்டிகள் நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் நடைபெற்றன. இதில், 19 வயதுக்கு உள்பட்ட மாணவிகள் பிரிவில் மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி அணியும், சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி அணியும் மோதியதில், மூக்குப்பீறி பள்ளி அணி 4 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.

வெற்றி பெற்ற மாணவிகள், உடற்பயிற்சி ஆசிரியா்கள் ஏஞ்சல் குமாரி, ராஜேஷ் ஜேக்கப் சிங் ஆகியோரை பள்ளித் தாளாளா் செல்வின், தலைமையாசிரியா் குணசீலராஜ் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com