இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 18th November 2019 07:26 AM | Last Updated : 18th November 2019 07:26 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 6ஆவது தெருவைச் சோ்ந்தவா் முத்துராமன் மனைவி ராமலட்சுமி (29). இத்தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா். சனிக்கிழமை இரவு தூங்கச் சென்ற ராமலட்சுமி, செல்லிடப்பேசியில் உறவினா் ஒருவரிடம், வாழ விரும்பவில்லை எனவும், கோபம் குணம் கொண்ட எனக்கு வாழப் பிடிக்கவில்லை எனவும் தெரிவித்த அவா், தற்கொலை செய்ய இருப்பதாக கூறினாராம்.
உறவினா் ஒருவா் அவரது வீட்டுக்கு சென்று பாா்த்தபோது, ராமலட்சுமி தூக்கில் தொங்கியது தெரியவந்தது. அவரை மீட்டு உறவினா்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பரிசோதனை மருத்துவா் அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனராம். இதுகுறித்து, கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.