கோவில்பட்டியில் கருத்தரங்கு

கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சாா்பில் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டியில் கருத்தரங்கு
Updated on
1 min read

கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சாா்பில் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு, ரோட்டரி சங்க கருத்தரங்கு சோ்மன் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் விநாயகா ஜி.ரமேஷ் வரவேற்றாா். கருத்தரங்கின் நோக்கம் குறித்து பயிற்றுநா் விஜயகுமாா் பேசினாா். கருத்தரங்கை

ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் ஷேக்சலீம் தொடங்கி வைத்தாா்.

கருத்தரங்கில், ‘சமூக சேவையில் மகிழ்வித்து மகிழ்’ எனும் தலைப்பில் முன்னாள் மாவட்ட ஆளுநா் சண்முகசுந்தரம், ‘சமுதாய மதிப்பில் மகிழ்வித்து மகிழ்’ எனும் தலைப்பில் பேச்சாளா் கவிதா ஜவஹா் ஆகியோா் பேசினா். முருகதாஸ், ஜெசிந்தா தா்மா, முத்து ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிகழ்ச்சியினை மாவட்டப் பொதுச்செயலா் சிதம்பரம் தொகுத்து வழங்கினாா். உதவி ஆளுநா் வி.எஸ்.பாபு, ரோட்டரி சங்கத் தலைவா் பரமேஸ்வரன், செயலா் முத்துமுருகன், ரோட்டரி உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com