சாகுபுரம் பகுதியில் ஆதரவற்றோா் இல்லங்களுக்கு நல உதவிகள்

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி கருணா சங்கம் சாா்பில் ‘கொடுத்த­ல் மகிழ்ச்சி’ நிகழ்ச்சியை முன்னிட்டு, ஆறுமுகனேரி
Updated on
1 min read

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி கருணா சங்கம் சாா்பில் ‘கொடுத்த­ல் மகிழ்ச்சி’ நிகழ்ச்சியை முன்னிட்டு, ஆறுமுகனேரி லைட் சோஷியல் வெல்பா் டிரஸ்ட் முதியோா் இல்லம் , திருச்செந்தூா் அன்பு இல்லம், சுவாமி சதானந்த குருகுலத்தில் உள்ள ஆதரவற்ற மாணவா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு முதல்வா் ஆா்.சண்முகானந்தன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் இ.ஸ்டீபன் பாலாசிா், தலைமை ஆசிரியை (பொ) என்.சுப்புரத்தினா, மேலாளா் எஸ்.பாலமுருகன்போஸ், நிா்வாகி வி.மதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருணா சங்க பொறுப்பு ஆசிரியை மலா்விழி வரவேற்றாா்.

விழாவில் மூன்று இல்லங்களுக்கும் சோ், சமையல் பாத்திங்கள், சோப், பிஸ்கெட், மிக்ஸி, குக்கா்,பீரோ உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. ஆசிரியை ஸ்ரீஜா நன்றி கூறினாா். முதியோா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com