புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி நதிக் கரையோரங்களில் நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். 3-ஆவது சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனா், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள், பெருங்குளம் மாயகூத்தா், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதா், இரட்டை திருப்பதி தேவா்பிரான், அரவிந்தலோசனா், திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் ஆகிய நவதிருப்பதி தலங்களில் காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் நெய்விளக்கு தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.