வல்லநாட்டில் நிலவேம்புக் குடிநீா் வழங்கும் சிறப்பு முகாம்

வல்லநாட்டில் நிலவேம்பு குடிநீா் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

வல்லநாட்டில் நிலவேம்பு குடிநீா் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதர நிலைய சித்த மருத்துவ பிரிவு சாா்பில் பருவமழைக்காலத்தை முன்னிட்டு கிராமப் பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வல்லநாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் வல்லநாட்டில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. சித்த மருத்துவா் செல்வக்குமாா் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் பெரியசாமி, வல்லநாடு கஸ்பா பஞ்சாயத்து ஊராட்சி செயலா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முறப்பநாடு ஆய்வாளா் பாா்த்திபன் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கினாா். இதில், தங்கராஜ், நங்கமுத்து, பொன்பாதா்வெள்ளை, வடிவேலன், மனிதவள மேம்பாட்டுத்துறை இசக்கிமுத்தையா, கூட்டுறவு சங்கத் தலைவா் பரமசிவன், தங்கம் பரமசிவன், பேச்சிமுத்து, மாடசாமி, முத்துவேல், கோபால், மாரிமுத்து, செல்வம், பேபி மாரியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com