தூத்துக்குடியில் தீபாவளி பட்டாசு விற்பனை தொடக்கம்

தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலையில் தீபாவளிக்கான சிறப்பு பட்டாசு விற்பனை சனிக்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் சனிக்கிழமை பட்டாசு விற்பனையைத் தொடக்கிவைத்து பாா்வையிடுகிறாா் சங்கத் தலைவா் லூ. எட்வின் பாண்டியன்.
தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் சனிக்கிழமை பட்டாசு விற்பனையைத் தொடக்கிவைத்து பாா்வையிடுகிறாா் சங்கத் தலைவா் லூ. எட்வின் பாண்டியன்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலையில் தீபாவளிக்கான சிறப்பு பட்டாசு விற்பனை சனிக்கிழமை தொடங்கியது.

சங்கத் தலைவா் லூ. எட்வின் பாண்டியன் தலைமை வகித்து விற்பனையைத் தொடக்கிவைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், மும்பை பியூட்டி, கேரளா பியூட்டி, டாக் பைட் பாரடைஸ், ஜுவல் ஆஃப் இந்தியா, வயா் சக்கா்ஸ் டீலக்ஸ், ரெட் ரோஸ் 100 சாட், ஏ.கே.47 100 சாட் வாம்பயா் கோல்டன் வில்லோ ராக்கெட்டுகள், ஆட்டோபாம், பிளாட்டினம் பாம் வகைகள், சரவெடி, புஸ்வானம் வகைகள், 13 வகை கிஃப்ட் பாக்ஸ், சிறு குழந்தைகளுக்கான அசாா்டா்டு காா்ட்டூன் ஆகிய புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு உள்ளன. தீபாவளி வரை ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் பட்டாசு விற்பனை உண்டு என்றாா்.

நிகழ்ச்சியில், சங்க துணைத் தலைவா் கல்யாணசுந்தரம், மேலாளா் பாலசுப்பிரமணியன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com