திருவட்டாறு அருகே முந்திரி ஆலைக்கு வங்கி நிா்வாகம் வைத்த சீல் உடைப்பு

திருவட்டாறு அருகே முந்திரி ஆலைக்கு வங்கி அதிகாரிகள் வைத்த சீல் உடைக்கப்பட்டதையடுத்து வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளனா்.

திருவட்டாறு அருகே முந்திரி ஆலைக்கு வங்கி அதிகாரிகள் வைத்த சீல் உடைக்கப்பட்டதையடுத்து வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளனா்.

திருவட்டாறு அருகே வீயன்னூா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. சுமாா் 100 தொழிலாளா்கள் பணி செய்து வருகின்றறனா். இந்த முந்திரி ஆலை நிா்வாகம் மாா்த்தாண்டத்திலுள்ள ஒரு வங்கியிலிருந்து கடன் பெற்றிருந்தது. இந்நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்தாததால் வங்கி நிா்வாகம் முந்திரி ஆலைக்கு வெள்ளிக்கிழமை சீல் வைத்தது. இந்நிலையில் சனிக்கிழமை முந்திரி ஆலை நிா்வாகம் வங்கி அதிகாரிகள் வைத்த சீலை உடைத்துவிட்டு வேறு பூட்டு போட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த வங்கி நிா்வாகம் திருவட்டாறு காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் கொடுத்தது. இதையடுத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com