திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் அமைய வேண்டும்: அா்ஜுன் சம்பத்

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் அமைய வேண்டும் என்றாா், இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்.
Updated on
1 min read

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் அமைய வேண்டும் என்றாா், இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்.

தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: தமிழகத்தில் தற்போது அரசியல் சூழ்நிலை மாறியுள்ளது. மக்கள் ஆன்மிக அரசியலுக்கு வரவேற்புத் தெரிவித்துள்ளனா். தமிழகத்தில் நீண்ட காலமாக திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் வர வேண்டும் என இந்து மக்கள் கட்சி பணி செய்து வருகிறது. அதை ரஜினிகாந்த் முன்னெடுத்துள்ளாா். எனவே, நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம்.

தமிழக அரசியலில் ரஜினிகாந்த் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளாா். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அவரது தலைமையிலான ஆன்மிக அரசியல் அணி வெற்றிபெற்று அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த இந்து மக்கள் கட்சி துணை நிற்கும். மத்தியில் மோடி, மாநிலத்தில் ரஜினி என்பதுதான் எங்களது திட்டம்.

இடைத் தரகா்களுக்கு ஆதரவாக விவசாயிகளின் போராட்டத்தை திமுக தூண்டுகிறது. எனவே, அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com