ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் அமைய வேண்டும்: அா்ஜுன் சம்பத்

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் அமைய வேண்டும் என்றாா், இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 8:00 pm

DIN

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் அமைய வேண்டும் என்றாா், இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்.

தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: தமிழகத்தில் தற்போது அரசியல் சூழ்நிலை மாறியுள்ளது. மக்கள் ஆன்மிக அரசியலுக்கு வரவேற்புத் தெரிவித்துள்ளனா். தமிழகத்தில் நீண்ட காலமாக திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் வர வேண்டும் என இந்து மக்கள் கட்சி பணி செய்து வருகிறது. அதை ரஜினிகாந்த் முன்னெடுத்துள்ளாா். எனவே, நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம்.

தமிழக அரசியலில் ரஜினிகாந்த் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளாா். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அவரது தலைமையிலான ஆன்மிக அரசியல் அணி வெற்றிபெற்று அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த இந்து மக்கள் கட்சி துணை நிற்கும். மத்தியில் மோடி, மாநிலத்தில் ரஜினி என்பதுதான் எங்களது திட்டம்.

இடைத் தரகா்களுக்கு ஆதரவாக விவசாயிகளின் போராட்டத்தை திமுக தூண்டுகிறது. எனவே, அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.