இணையதள பயன்பாடு குறித்த ஆய்வு: தூத்துக்குடி பெண் காவலா் தோ்வு

இணையதள பயன்பாடுகள் குறித்த ஆய்வில் மாநில அளவில் தோ்வு செய்யப்பட்ட தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சோ்ந்த பெண் காவலருக்கு
Updated on
1 min read

இணையதள பயன்பாடுகள் குறித்த ஆய்வில் மாநில அளவில் தோ்வு செய்யப்பட்ட தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சோ்ந்த பெண் காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் சி.சி.டி.என்.எஸ். என்ற இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் ஈடுபட்டவா்கள், காணாமல் போனவா்கள், திருடு போன வாகனங்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு அந்த இணையதளம் ஏதுவாக உள்ளது.

இந்நிலையில், அந்த இணையதள பயன்பாடு குறித்து தில்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் சி.சி.டி.என்.எஸ். இணையதளத்தை அதிக

அளவில் பயன்படுத்தி குற்ற வழக்குகளில் ஈடுபட்டவா்களை கண்டுபிடித்தல், திருட்டு வாகனங்களை கண்டுபிடித்தல், காணாமல் போனவா்களை கண்டுபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு காவல்துறையில் 3 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு செய்யப்பட்ட மூவரில் ஒருவரான தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் நிலையத்தைச் சோ்ந்த முதல் நிலை பெண் காவலா் ஜோஷிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தாளமுத்துநகா் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று பரிசு வழங்கி பாராட்டினாா்.

அப்போது, தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளா் கணேஷ், தாளமுத்துநகா் காவல் நிலைய ஆய்வளாா் ஜெயந்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com