கோவில்பட்டி பகுதியில் நாளை மின்தடை

கோவில்பட்டி கோட்ட மின்வாரியத்துக்கு உள்பட்ட துணை மின் நிலைய பகுதிகளில் சனிக்கிழமை (டிச.19) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கோவில்பட்டி கோட்ட மின்வாரியத்துக்கு உள்பட்ட துணை மின் நிலைய பகுதிகளில் சனிக்கிழமை (டிச.19) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சகா்பான் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மற்றும் சிட்கோ துணை மின் நிலையம், எட்டயபுரம் துணை மின் நிலையம், சன்னதுபுதுக்குடி துணை மின் நிலையம், விஜயாபுரி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com